நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... ஜூலை 19ல் தொடங்குகிறது...

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்... ஜூலை 19ல் தொடங்குகிறது...
நாடாளுமன்ற  மழைக்காலத் கூட்டத்தை வரும் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் நிறைவேற்றபடும் என்று தெரிகிறது.
 
கொரோனா இரண்டாம் அலைக்கு பின்பு நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டம் இதுவாகும். முன்னதாக 17வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ம் தேதி குடியரசு தலைவர் உரையிடன் தொடங்கியது. பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர்  பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது குறிப்பிடதக்கது.