புதுமனை புகுவிழாவில் திருநங்கைகள் தகராறு.. பூஜை கட்டணமாக ரூ.40,000 கேட்டதால் அதிர்ச்சி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதுமனை புகுவிழாவில் அத்துமீறி உள்ளே புகுந்த திருநங்கைகள் பணம் கேட்டு மிரட்டி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுமனை புகுவிழாவில் திருநங்கைகள் தகராறு.. பூஜை கட்டணமாக ரூ.40,000 கேட்டதால் அதிர்ச்சி!!

பெங்களூர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் புதிய வீடு கட்டி, புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது வீட்டிற்குள் திருநங்கைகள் சிலர் கூட்டமாக நுழைந்து உரிமையாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே பூஜை செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பூஜைக் கட்டணமாக 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் லோகேஷ் வெறும் 2,500 ரூபாய் மட்டுமே கொடுக்க ஆத்திரமடைந்த அவர்கள், ஆபாச வார்த்தைகளால் லோகேஷ் குடும்பத்தினரை வசைபாடியதுடன் அருவருக்கத் தக்க வகையில் நடந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து லோகேஷ் குடும்பத்தினருக்கும், திருநங்கைகளுக்கும் மோதல் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் வீடியோவாக படம்பிடிக்கப்பட்ட நிலையில், அதனடிப்படையில் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். திருநங்கைகளின் இந்த அத்துமீறிய செயலால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.