தங்கையை மனைவியாக்கிய அண்ணன்..கருமம் கருமம் இப்படிலாமா பண்ணுவீங்க

 தங்கையை மனைவியாக்கிய அண்ணன்..கருமம் கருமம் இப்படிலாமா பண்ணுவீங்க

அரசின் சலுகையை பெற சொந்த தங்கையை அண்ணனே திருமணம் செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை மக்கள் திருமணம் செய்ய உதவி தொகைகளை அரசு அறிவித்துள்ளது. அதன் படி அரசின் செலவில் ஒரே இடத்தில்பல திருமணங்கள் நடத்தப்படும். அப்படியாக நடத்தப்படும் போது தம்பதிகளுக்கு ரூ35 ஆயிரம் பணம் மற்றும் திருமண சீர்வரிசைகள் அரசு சார்பீில் கொடுக்கப்படும்.

இப்படியாக கடந்த 11ம் தேதி உ.பி மாநிலம் ஃபெரோசாபாத்தில் ஒரே இடத்தில் 51 பேருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் இதில் ஒரு தம்பதி அண்ணன் தங்கை என்பது தெரியவந்ததுள்ளது. அவர்கள் அரசின் சலுகைகளை பெற திருமணம் செய்வது போல நடித்து அரசை ஏமாற்றியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் போலீசார் இவரும் மீது வழக்குப்பதிவு செய்து இவரது ஆதார் கார்டுகளும் மீண்டும் சோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருமண சீர்வரிசையாக கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் திரும்ப வாங்கப்பட்டன. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.