காதலியின் தலையுடன் காவல் நிலையத்தில் புகுந்த காதலன்.. அப்படி என்ன கோவம்? பரபரப்பு!!

கர்நாடகாவில் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதை தட்டிக் கேட்ட காதலி தலையை துண்டித்து கொலை செய்த காதலன் போலீசில் சரணடைந்தார்.

காதலியின் தலையுடன் காவல் நிலையத்தில் புகுந்த காதலன்.. அப்படி என்ன கோவம்? பரபரப்பு!!

விஜயநகரா மாவட்டம் கானஹொசஹள்ளியை அடுத்த கன்னபோரய்யனஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் போஜராஜு. அவரும் அதே கிராமத்தை சேர்ந்த நிர்மலாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

காதல் தகராறு:

போஜராஜுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அப்பெண் கூறியுள்ளார். ஆனால், காதலன் 3 மாதங்களுக்கு முன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த  நிர்மலா தன்னை ஏமாற்றி விட்டாயே என்று போஜராஜுவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

தலையுடன் காவல் நிலையத்தில் சரண்:

இந்நிலையில், நிர்மலா தனது வீட்டில் தனியாக இருந்த போது வீட்டுக்குள் திடீரென புகுந்த போஜராஜு, கத்தியால் நிர்மலா கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் நிர்மலா தலையுடன்  கானஹொசஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.