பிரதமருக்கு  எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது? - பஞ்சாப் முதல்வர் கேள்வி!!

பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது என அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமருக்கு  எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது? - பஞ்சாப் முதல்வர் கேள்வி!!

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்ற போது, சிலர் மறியலில் ஈடுபட்டதால் பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்  சுமார் 20 நிமிடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலத்தில் நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திரமோடி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபில் பிரதமருக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவர் முற்றிலும் பாதுகாப்பாக இருந்தார் என்றும் கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார்.