தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்...!!

தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்...!!

குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில்  சட்டப்பேரவை தேர்தல் தேதி தொடர்பான தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்:

குஜராத் மாநிலத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 111 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

மும்முனைப் போட்டி:


இதையடுத்து இந்த அரசின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைவதால், விரைவில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு குஜராத்தில் பாஜக, காங்கிரஸுடன், களம் காண திட்டமிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தீவிரம் பிரசாரம் செய்து வருகிறார். 

இமாச்சல பிரதேசம்:


இதேபோல் 68 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட இமாச்சல பிரதேச மாநிலத்திலும் 44 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவை சேர்ந்த ஜெய் ராம் தாக்கூர் ஆட்சி செய்து வருகிறார்.

இவரது பதவிக்காலமும் வருகிற டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறுவதால், விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 

பிற்பகல் 3 மணிக்கு...:

இந்தநிலையில், இந்த இரு மாநிலங்களில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் நிரலை வெளியிட்டுள்ளார். 

இமாச்சல பிரதேசத்தில்:

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.  மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ல் வாக்குப்பதிவு நடக்கும் எனவும் கூறியுள்ளார்.

நவம்பர் 12-பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அக்டோபர் 17-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும் என்றும்  வேட்பு மனு தாக்கல் செய்ய அக்டோபர் 25-ம் தேதி  கடைசி நாள்  என்றும்  தெரிவித்துள்ளார்.
 
குஜராத்தில்:

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்  என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  தேர்தல் தேதி  பின்னர் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார்.

                                                                                                                                                                                                                                 -நப்பசலையார் 

இதையும் படிக்க:    பிரதமரின் தாயாரை அவதூறாக பேசிய ஆம் ஆத்மி தலைவர்....!! கண்டனம் தெரிவித்த பாஜக!!!