"மேகதாது குறித்து விவாதிக்கப்பட மாட்டாது" - காவிரி மேலாண்மை ஆணையம்

நாளை நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

"மேகதாது குறித்து விவாதிக்கப்பட மாட்டாது" -  காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேகதாது அணை விவகாரம்:

இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

மேகதாது குறித்து விவாதிக்கப்பட மாட்டாது:

இந்நிலையில் அணை தொடர்பாக விவாதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசால் ஆணையத்தின் கூட்டம் ஏற்கனவே 3 முறை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஒருவழியாக காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் திட்டமிட்டபடி கூட்டம் நாளை நடைபெறும் எனவும், மேகதாது அணை குறித்து அதில் விவாதிக்கப்படாது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.