சுப்பிரமணிய சுவாமியை தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கியது பாஜக...

பாஜக தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர்களாக ஹெச்.ராஜா மற்றும் குஷ்பு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுப்பிரமணிய சுவாமியை தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கியது பாஜக...

தேசிய செயற்குழு உறுப் பினர்களில் மாற்றி அமைக்கப்பட்ட உறுப் பினர்களின் 80 பேர் அடங்கிய பட்டியலில், பாஜக தலைவர் ஜே. பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் முன்னாள் கட்சி தலைவர்கள் மற்றும் தற்போதைய மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், ரவிசங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரும் தேசிய செயற்குழு உறுப் பினர்களாக உள்ளனர்.

50 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் 179 நிரந்தர அழைப்பாளர்கள், முதலமைச்சர்கள், துணை முதல்வர்கள், தேசிய செய்தித் தொடர்பாளர்கள், தேசியப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாநிலப் பிரிவுத் தலைவர்கள் ஆகியோரும் தேசிய செயற்குழுவின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் டாக்டர் மகேஷ் சர்மா, விஜய் கோயல், டாக்டர் சி. பி. தாக்கூர், தற்போதைய மத்திய அமைச்சர்கள் ராவ் இந்தர்ஜித் சிங், அஷ்வினி குமார் சவுபே மற்றும் பிரஹ்லாத் சிங் பட்டேல், ராஜ்யசபா உறுப் பினர் சுப் பிரமணியன் சுவாமி ஆகியோர் இந்த முறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மக்களவை உறுப் பினர்கள் மேனகா காந்தி மற்றும் அவரது மகன் வருண் காந்தி ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக வருண்காந்தி டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். காந்தி கூறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த பட்டியல் அறிவிக்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. "கொலையின் மூலம் எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த முடியாது. விவசாயிகளின் அப்பாவி இரத்தத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் ட்வீட் செய்திருந்தார்.