பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை...  இந்திய பாதுகாப்பு படையினர் தகவல்...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொலை...  இந்திய பாதுகாப்பு படையினர் தகவல்...

காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களில், பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.  இரண்டு வெவ்வேறு என்கவுண்டர்களில் மொத்தம் 5 பேர் கொல்லப்பட்டதாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.