பீகாரில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த ரயில் தீ விபத்து?.. 5 பெட்டிகள் எரிந்து நாசம்.. பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!!

பீகாரில் நின்று கொண்டிருந்த ரயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பீகாரில் பயங்கரம்.. நின்று கொண்டிருந்த ரயில் தீ விபத்து?.. 5 பெட்டிகள் எரிந்து நாசம்.. பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு!!

பீகாரில் மதுபானி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், ரெயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. ஆனால், ரயில் முழுவதுமாக காலியாக இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து பார்ப்போர்களை பதறவைத்துள்ளது. மேலும், அங்கிருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். மேலும் நின்று கொண்டிருந்த ரயில் எப்படி தீ பற்றி இருக்கும் என்பதை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.