சுஷில் சந்திரா பதவிக்காலம் முடிவு.. புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுஷில் சந்திரா பதவிக்காலம் முடிவு.. புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக  சுஷில் சந்திரா கடந்தாண்டு மே மாதம் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவரது பதவிக்காலம் வரும் 14ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஓய்வு பெற்றவுடன் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு மூத்த தேர்தல் ஆணையர் நியமிக்கப்படுவது வழக்கம்.

அந்த வரிசையில் அவரது இடத்தில் மூத்த தேர்தல் அதிகாரியான ராஜீவ் குமாரை நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவர் வரும் 15ம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.