மக்களை காக்க உயிர்விடும் மருத்துவர்கள்: காரணம் என்ன?

மக்களை காக்க உயிர்விடும் மருத்துவர்கள்: காரணம் என்ன?

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையின் தாக்கத்துக்கு 594 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்து சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் மருத்துவர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் இதுவரை 594-மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மட்டும் 107-மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 67 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.