சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்பதிவு தொடக்கம்... ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி...

ஜனவரி 3-ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தொடங்கியது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்பதிவு தொடக்கம்... ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி...

நாடு முழுவதும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றான ஒமிக்ரான் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், ஜனவரி 3ம் தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அதற்கான முன்பதிவு கோவின் செயலியில் தொடங்கியது. தடுப்பூசி செலுத்திக்‌ கொள்வதற்கு முன்பதிவு செய்ய ஆதார்‌ அட்டை அல்லது 10-ம்‌ வகுப்பு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழ்நாட்டில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறார்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.