பீகாரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்.. அவசரமாக தரையிறக்கம்!!

பீகாரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்..  அவசரமாக தரையிறக்கம்!!

பீகாரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் நடுவானில் திடீரென தீப்பிடித்ததால் உடனடியாக தரையிறக்கப்பட்டதை அடுத்து பெருவிபத்து தவிர்க்கப்பட்டது.

பாட்னா விமான நிலையத்தில் இருந்து 185 பயணிகளுடன் டெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடிரென தீவிபத்து ஏற்பட்ட நிலையில், அவரச அவசரமாக விமானம் தரையிரக்கப்பட்டது.

தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாக விமானம் தரையிரக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.