உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல்... மூத்த தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை...

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மூத்த தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல்... மூத்த தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை...

உத்தர பிரதேசத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அங்கு முழு வீச்சில் கள பணி மட்டுமின்றி அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறது. 

பிரியங்கா காந்தியின் பிரச்சாரம் உத்தர பிரதேச மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் உத்திர பிரதேச தேர்தல் களத்தில் பிரியங்கா முழுவீச்சில் களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று மூத்த தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வியூகங்கள் குறித்தும் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.