லக்கிம்பர் வன்முறை: காவல் நிலையத்தில் ஆஜராகாத மத்திய இணையமைச்சரின் மகன்...

லக்கிம்பூர்  வன்முறை சம்பவம் குறித்த விசாரணைக்கு மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகராக வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

லக்கிம்பர் வன்முறை: காவல் நிலையத்தில் ஆஜராகாத மத்திய இணையமைச்சரின் மகன்...

லக்கிம்பூர்  வன்முறை சம்பவம் குறித்த விசாரணைக்கு மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா ஆகராக வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகள் மீது  கார் ஏறி இறங்கியதில் 4 பேர் பலியாகினர். இதையடுத்து வெடித்த வன்முறையில் மேலும் 5  பேர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்வத்தில்   மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆகிஷ் மிஸ்ரா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ஆசிஷ் மிஸ்ரா மீது லக்கிம்பூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இன்று காலை 10மணிக்கு காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராக வில்லை. அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என காவல்துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.