பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் வெட்டி படுகொலை.. நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கேறிய பயங்கரம்!!

பட்டப்பகலில் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நடைபெற்ற கொலை கர்நாடக மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

பட்டப்பகலில் நடுரோட்டில்  ஒருவர் வெட்டி படுகொலை.. நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கேறிய பயங்கரம்!!

கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டம் ஆசிகிரி கிராமத்தை சேர்ந்தவர் சலீம். இவரை அதே கிராமத்தை சேர்ந்த ஜகீர் என்பவர் பட்டப்பகலில் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் வெட்டி கொலை செய்தார். இதன் வீடியோ தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சலீம் மற்றும் ஜகீர் இடையே பல வருடங்களாக பகை இருந்துள்ளது. முன் பகையை கொண்டு இன்று காலை பகொலை சம்பவம் அரங்கேறிய நிலையில் சன்னகிரி காவல்துறையினர் சலீமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் நடந்த இந்த கொலையை தடுக்க யாரும் முன்வரவில்லை. மாறாக  மும்மரமாக  வீடியோ எடுத்தது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.