இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

இந்தியாவில் நேற்றை விட இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாவே மின்னல் வேகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30, 757 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை 30 ஆயிரத்து 615 ஐ விட அதிகமாகும். இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,27,54,315 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு குறைந்து வரும் அதே நேரத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67, 538 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,19,10,984 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,10,413 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  3 லட்சத்து 32 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்து வருகிறது.