லக்னோவில் மாநில பட்ஜெட்டுக்கு கிளம்பிய எதிர்ப்பு...தர்ணாவில் ஈடுபட்ட சமாஜ்வாதி எம்எல்ஏக்கள்...!
உத்தரபிரதேசத்தில் யோகி அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்தில் சமாஜ்வாடி எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
உத்தரபிரதேசம் லக்னோவில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசின் தலைமையிலான மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க : மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்...நண்பரின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!
இந்நிலையில், மக்களின் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்படவில்லை எனக்கூறி, சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது, போலீசாரும் எம்எல்ஏக்களும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
#WATCH | Uttar Pradesh: Samajwadi Party (SP) MLAs protest against the state government, outside the state assembly in Lucknow ahead of the commencement of the Assembly Session. pic.twitter.com/eeJmldLVMv
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 20, 2023