பஞ்சாப் எல்லையில் எஸ்-400 ஏவுகணை... இந்திய விமானப்படை முடிவு...

விரைவில் இந்தியா வரவுள்ள எஸ்-400 ரக ஏவுகணையை பஞ்சாப் எல்லையில் நிலைநிறுத்த முடிவு.

பஞ்சாப் எல்லையில் எஸ்-400 ஏவுகணை... இந்திய விமானப்படை முடிவு...

ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன எஸ் 400 ரக ஏவுகணையின் முதல் படைப்பிரிவை பஞ்சாப் எல்லையில் நிலைநிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளைக்கூட மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன அம்சங்கள் கொண்ட எஸ் 400 ரக ஏவுகணையை விநியோகிக்கும் பணியை ரஷ்யா தொடங்கியுள்ளது.

இதன் முதல் தொகுப்பு இன்னும் இரு வாரங்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் வான்வழி அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், வாங்கப்பட்டுள்ள எஸ் 400 ரக ஏவுகணையின் முதல் படைப்பிரிவை பஞ்சாப் எல்லையில் நிலைநிறுத்த இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.