கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்.!!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி  தலா 50 ஆயிரம் நிதியுதவியை வழங்கினார்.

புதுச்சேரி மாநிலத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால், இதுவரை ஆயிரத்து, 845 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு  காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி, வழங்கினார்.