புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுப்பு.. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க மறுப்பு.. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மிக மோசமான பரவி வரக்கூடிய நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் இரண்டு வாரங்களுக்கு முன் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பிணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில் இன்று இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு எந்தவிதமான தடையும் விதிக்க முடியாது என திட்டவட்டமாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மனுதார் மனு தொடர்ததில் உள்நோக்கம் உள்ளது என கூறி அவருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசிய பணி என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.