ஊழலில் கொடிகட்டி பறக்கும் பாஜக அரசு.. "150 தொகுதிகளுக்கு டார்கெட்" - ராகுல் காந்தி கூறியது என்ன?

கர்நாடகாவில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் கட்சியினர் பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊழலில் கொடிகட்டி பறக்கும் பாஜக அரசு.. "150 தொகுதிகளுக்கு டார்கெட்" - ராகுல் காந்தி கூறியது என்ன?

கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பெங்களுருவில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். தற்போது உள்ள பாஜக மக்கள் விரோத அரசு என விமர்சித்த ராகுல்காந்தி,

பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பாஜக வரும் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டிய கட்சி ஆகும் என தெரிவித்தார். தேர்தலில் வெற்றி என்ற நிலைப்பாடு என்று மட்டும் இல்லாமல் குறைந்தது 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ராகுல்காந்தி,  இயற்கையாகவே காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகாவில் பலம் உள்ளது என்றும், கர்நாடக பாஜக ஆட்சியில் அனைத்து அரசு பணிகளுக்கும் 40 சதவீதம் கமிஷன் வாங்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

ஊழலில் கொடிகட்டி பறந்து வரும் பாஜக அரசு பற்றி பிரதமர் மோடி வாய் திறக்க மாட்டார் என்றும் அப்போது அவர் விமர்சித்தார்.