புல்வாமா தாக்குதல் மோடியின் திட்டமிட்ட சதி : புயலை கிளப்பிய காங்கிரஸ் தலைவரின் பதிவு!!

புல்வாமா தாக்குதல் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிட்ட சதி - காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ்

புல்வாமா தாக்குதல் மோடியின் திட்டமிட்ட சதி : புயலை கிளப்பிய காங்கிரஸ் தலைவரின் பதிவு!!

'புல்வாமா தாக்குதல்' பிரதமர் மோடியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி, என காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தை பாஜகவினர் வேண்டுமென்றே பெரிதாக்கி, தேர்தல் வெற்றிக்கான யுக்தியாக பயன்படுத்தி வருவதாக காங்கிரசார் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜின் டுவிட்டர் பதிவு பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் பின்புலத்தில், பிரதமர் மோடியின் பதவிப் பசி இருக்கிறது என்பதை, தற்போதைய பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தை மோடி கையாண்டு வருவதே தெளிவாக காட்டுவதாக அவர் பதிவிட்டுள்ளார். இது பெரும் புயலை கிளப்பியுள்ளது.