புதுச்சேரி : எம்.எல்.ஏவுக்கு பிரான்சில் இருந்து கொலை மிரட்டல் கடிதம்...! போலீசார் விசாரணை...!

புதுச்சேரி : எம்.எல்.ஏவுக்கு பிரான்சில் இருந்து கொலை மிரட்டல் கடிதம்...! போலீசார் விசாரணை...!

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார். இவருக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்ததுள்ளது, அந்த கடிதத்தில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது குடும்பத்தினரை பொங்கல் திருநாளுக்குள் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார். இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் கடந்த மாதம் முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளை நோக்கி இருப்பதாக புகார் கூறப்பட்டது, இது தொடர்பாக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்குமார் அந்த ஒட்டலுக்கு எதிராக போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதன் பின்னர் அந்த விடுதியின் உரிமையாளர் பாலா சினிவாசன் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தான் கொலை மிரட்டல் கடிதமும் வந்துள்ளதால் போலீசார் இந்த கடிதத்தை அவர் அனுப்பி இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.