பணியாளர்கள் காலணி அணியாததைக் கண்டு 100ஜோடி காலணியை அனுப்பி வைத்த பிரதமர் மோடி!!..

வாரணாசி காசி விசுவநாதர் கோவில் பணியாளர்களுக்காகச் சணலால் செய்யப்பட்ட நூறு ஜோடிக் காலணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி அனுப்பி வைத்துள்ளார்.

பணியாளர்கள் காலணி அணியாததைக் கண்டு 100ஜோடி காலணியை அனுப்பி வைத்த பிரதமர் மோடி!!..

காசி விசுவநாதர் கோவில் வளாகத்தைக் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது கோவில் பணியாளர்கள் காலணி அணியாமல் வெறுங்காலால் நடந்ததையும், கோவிலுக்குள் தோல், ரப்பர் ஆகியவற்றால் ஆன காலணிகள் அணியத் தடை உள்ளதையும் அறிந்தார். இதையடுத்துப் பல்வேறு வண்ணங்களில் சணலால் உருவாக்கப்பட்டுள்ள நூறு ஜோடிக் காலணிகளைக் கோவில் பணியாளர்களுக்காக அனுப்பி வைத்துள்ளார்.