உ.பி. முதல்வர் யோகி ஆத்தியநாத்தை பாராட்டிய பிரதமர் மோடி...
உத்திர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆத்தியநாத் கொண்டு வந்துள்ள மூத்த குடிமக்களுக்கான நில திட்டத்தை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் மூத்த குடிமக்கள், சுகாதார மற்றும் சட்ட உதவிகளை எளிதில் பெறும் வகையில் அவசர உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் யோகி ஆத்தியநாத் அறிமுகப்படுத்தியுள்ளார். யோகி ஆத்தியநாத்தின் இந்த புதிய திட்டத்தை, பிரதமர் மோடி பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு யோகி ஆத்தியநாத் தனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Very good initiative! @myogiadityanath https://t. co/Wl9thDO9Wk
— Narendra Modi (@narendramodi) June 13, 2021
உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு மாநிலத்தில் புதிய தலைமையை நிர்ணயிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.