மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றுகிறார்...

இன்று காலை 11 மணி அளவில் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றுகிறார்...

 கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்று அழைக்கப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி இம்மாதத்தின் கடைசி ஞாயிரான இன்று 81-வது மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இதில்அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் உச்சி மா நாடு, ஐ. நா. சபை உரை, அதிபர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.