குழந்தையின் மருந்துக்கு வரிவிலக்கு... பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்...

குழந்தையின் மருந்துக்கு வரிவிலக்கு கோரி பிரதமருக்கு கேரள முதல்வர் பினரயி விஜய கடிதம் எழுதியுள்ளார்.

குழந்தையின் மருந்துக்கு வரிவிலக்கு... பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்...
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள கேரள குழந்தைக்கு செலுத்த வேண்டிய மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கும்படி பிரமதர் மோடிக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பான கடிதத்தில், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை முகமது, அரிய வகை முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக விஜயன் குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கென 18 கோடி ரூபாய் மதிப்பிலான சோல்கென்ஸ்மா என்ற மருந்தை செலுத்த வேண்டியிருப்பதாகவும் இந்த மருந்தினை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதால், உயிர்காக்கும் அம்மருந்துக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு வழங்க மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரினார்.