நாடாளுமன்ற தேர்தல் : 4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்..! 

நாடாளுமன்ற தேர்தல் :  4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம்..! 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசியக் கட்சிகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செயல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தெலங்கானா மாநிலத் தலைவராகவும், புரந்தேஷ்வரியை ஆந்திரா மாநிலத் தலைவராகவும், முன்னாள் முதலமைச்சர் பாபுலால் மராண்டியை ஜார்கண்ட் மாநிலத் தலைவராகவும், சுனில் ஜாகரை பஞ்சாப் மாநிலத் தலைவராகவும் பாஜக நியமித்துள்ளது.  

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க    | நாடாளுமன்ற தேர்தல்: நான்கு மாவட்டங்களில் செக் மேட் வைக்கும் திமுக! யார் அந்த வேட்பாளர்கள்?