4 நாட்களுக்குப்பின் கூடிய நாடாளுமன்றம்.... மீண்டும் ஒத்திவைப்பு!!

4  நாட்களுக்குப்பின் கூடிய நாடாளுமன்றம்.... மீண்டும் ஒத்திவைப்பு!!

ராகுல் பதவிநீக்கம் மற்றும் அதானி விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்ற பெயரிலேயே முடிகிறது என கடந்த 2019ம் ஆண்டு பேசியது தொடர்பாக ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.  இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து வீசியும் அமளியில் ஈடுபட்டு வந்தன.  இந்நிலையில், 4 நாட்களுக்குப்பின் நாடாளுமன்றம் இன்று கூடியது. 

தொடர்ந்து சமீபத்தில் காலமான நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் இன்னசென்ட், கிரிஷ் பாபட் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதையடுத்து அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.  அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவது மற்றும் ராகுல்காந்தி பதவி நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்கட்சிகள் கருப்பு உடையணிந்து சென்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் அவை நடவடிக்கைகள் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார்.

இதையும் படிக்க:    அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்றுகை போராட்டம்....!!!