இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடி உள்ளார். அப்போது இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை இங்கிலாந்து அங்கீகரித்ததற்கு, பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடி உள்ளார். அப்போது இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை இங்கிலாந்து அங்கீகரித்ததற்கு, பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும், கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், சர்வதேச போக்குவரத்தை  மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை பற்றியும், தலிபான்களுடன் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த சர்வதேச அணுகுமுறையின் அவசியம் குறித்தும் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. நாட்டில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை இருநாட்டு தலைவர்களும் வலியுறுத்தியதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.