இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி!!!

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் மோடி!!!

இந்தோனேசியாவின் பாலியில்  நாளை நடைபெறும் 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

பாலி செல்லும் பிரதமர் மோடி:

இந்தோனேசியாவில் நவம்பர் 14-ம் தேதி தொடங்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை பாலி செல்கிறார்.  இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை நடைபெறும் 17வது ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.  

எதைக் குறித்த விவாதம்:

பாலி உச்சி மாநாட்டின் போது, ​​பிரதமர் மோடி மற்றும் பிற G20 தலைவர்கள் உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், விவசாயம், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    நளினியின் முதல் செய்தியாளர் சந்திப்பு...பிரியங்கா காந்தியுடனான சந்திப்பின் மர்மம் என்ன?!!...