ஆப்ரேஷன் காவிரி...! 2,300 இந்தியர்கள் மீட்பு...!!
ஆப்ரேஷன் காவிரியின் கீழ் இதுவரை 2,300 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
சூடானில் அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினிடையே தொடர் மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூடானில் சிக்கியுள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக நாடு திருப்புவதற்கான பணியை இந்திய அரசு தொடங்கியது. சூடானில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்க ஆபரேஷன் காவிரி என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொளடள்ளப்பட்டன.
இந்நிலையில் ஆப்ரேஷன் காவிரியின் கீழ் இதுவரை 2 ஆயிரத்து 300 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 2 ஆயிரத்து 300 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க:டுவிட்டரில் கட்டுரைகளை படிக்க கட்டணம்...! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு...!!