ஜம்மு காஷ்மீரில் தொடரும் படுகொலைகள்... ஆளுநருடன் அமித் ஷா இன்று ஆலோசனை...

ஜம்மு காஷ்மீரில் அண்மைக்காலமாக தொடரும் படுகொலைகள் குறித்து, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தொடரும் படுகொலைகள்... ஆளுநருடன் அமித் ஷா இன்று ஆலோசனை...

ஸ்ரீநகரின் ஈத்கா-வில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரண்டு ஆசிரியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த ஆண்டில் இதுவரை பொதுமக்கள் 28 பேர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆநருடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அமித் ஷா, அவசரம் அவசரமாக டெல்லி திரும்பி உள்ளார். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஷ் சின்கா, இன்று காலை டெல்லி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.