மதநல்லிணக்க தீபாவளி... விளக்குகளால் ஜொலித்த நிஜாமுதீன் தர்கா...

மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி நிஜாமுதீன் தர்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

மதநல்லிணக்க தீபாவளி... விளக்குகளால் ஜொலித்த நிஜாமுதீன் தர்கா...

மதநல்லிணக்கத்தை உணர்த்தும்விதமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லி நிஜாமுதீன் தர்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் பண்டிகையான  தீபாவளி  நாளை நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. மதநல்லிணக் கத்தை உணர்த்தும்விதமாக டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா அலங்கார விளக்குகளாலும் அகல் விளக்குகளாலும மிளிர்ந்தது காண்போரைக் கவர்ந்தது.

இதுகுறித்து தர்கா நிர்வாகிகள் பேசிய போது இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் புனித சூஃபி ஹஸ்ரத் மஹ்புப்-இ-இலாஹியை நேசிக்கிறார்கள். அதுமட்டுமின்றி தங்கள் பண்டிகைகளின் போது தர்காவுக்கு வருகிறார்கள். அப்போது அவர்கள் இங்கே அகலவிளக்குகளை ஏற்றி வணங்குகிறார்கள். தர்காக்கள் அனைவருக்குமான ஒரு இடமாக திகழ்கிறது என தெரிவித்தனர்.