ஸ்பா சென்டர்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை..!!

அசாம் மாநிலம், கவுகாத்தியில், சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா சென்டர்களுக்கான புதிய நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

ஸ்பா சென்டர்களில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை..!!

அசாம் மாநிலம், கவுகாத்தியில், சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா சென்டர்களுக்கான புதிய நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி குவஹாத்தி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி ஆண்களுக்கு ஆண்கள் மட்டும் தான் மசாஸ் செய்ய வேண்டும் என்றும் எதிர்பாலினத்தவர் மசாஸ் செய்ய கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்டர்களில் பிரத்தியேக அறை என்று எதுவும் இருக்க கூடாது என்றும் பிரதான கதவு வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பா சென்டர் என்ற பெயரில் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு முறைகேடுகளை தடுக்கும் விதமாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.