வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல்...! ஆயுதங்களுடன் மிரட்டிய பரபரப்பு சம்பவம்...!

வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பல்...! ஆயுதங்களுடன் மிரட்டிய பரபரப்பு சம்பவம்...!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் நாந்தேட்டில் உள்ள வங்கி ஒன்றில் ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பட்டப்பகலில் கூர்மையான ஆயுதங்களான அரிவாள், பட்டகத்திகளுடன் முகமூடி அணிந்துகொண்டு நுழைந்தனர். வங்கிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், ஊழியர்களை மிரட்டியம், தாக்கியும் 2.04 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று நடந்த இந்த சம்பவம் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. 

 

கொள்ளையடித்துவிட்டு அவர்கக்ள் தப்ப முயன்ற போது, ஏழு பேர்களில் ஒருவர் பொதுமக்கள் மற்றும் வங்கி ஊழியர்களால் பிடிபட்டார். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மற்ற ஆறு பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் வாங்கி கொள்ளையில் ஈடுபட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.