ரயில்வே பொது சொத்துகளை சேதமாக்க வேண்டாம் - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கோரிக்கை

ரயில்வே பொது சொத்துகளை தயவு செய்து சேதப்படுத்த வேண்டாம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கோரிக்கை வைத்துள்ளார்.

ரயில்வே பொது சொத்துகளை சேதமாக்க வேண்டாம் - அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கோரிக்கை

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ராணுவத்திற்கு தேர்வான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பீகாரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இஸ்லாம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர்.

அதேபோல் பாட்னாவில் தானாபூர் ரயில் நிலையத்தில் ரயில்களின் மேல் தாக்குதல் நடத்தினர். மேலும், ரயில் நிலையங்களில் உள்ள அரசின் சொத்துகளை சேதமாக்கினர். இதையடுத்து ரயில்வே சொத்துகளை தயவு செய்து சேதப்படுத்த வேண்டாம் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.