நடுவானில் கோளாறு... விமானம் அவசரமாக தரையிறக்கம்...!!

நடுவானில் கோளாறு... விமானம் அவசரமாக தரையிறக்கம்...!!

டெல்லியிலிருந்து மேற்கு வங்கம் சென்ற விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, நேற்று டெல்லியில் இருந்து மேற்கு வங்கத்தை நோக்கி 200 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. நடுவானில்  பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து கோளாறைக் கண்டறிந்த விமானி, டெல்லியிலேயே விமானத்தை அவசரமாக தரையிறக்கம் செய்தார். 

இந்நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் மேற்குவங்கம் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.