பயன்படுத்தப்பட்ட ஆணுறையை கோவில் உண்டியலில் போட்டு வந்த 60 வயது முதியவர் கைது...

கோயில் உண்டியல்களில் ஆணுறைகள் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயன்படுத்தப்பட்ட ஆணுறையை கோவில் உண்டியலில் போட்டு வந்த 60 வயது முதியவர் கைது...
பயன்படுத்தப்பட்ட ஆணுறையை கோவில் உண்டியலில் போட்டு வந்த 60 வயது முதியவர் கைது...

கோயில் உண்டியல்களில் ஆணுறைகள் கிடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மங்களூருவில் உள்ள பல கோவில்களில் உண்டியல்களில் ஆணுறைகள் கிடந்துள்ளதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் உள்ளனர்.சந்தேகத்தின் அடிப்படையில் இது சம்பந்தமாக தேவதாஸ் என்ற ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.மங்களூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறைய கோவில்கள் உள்ளன.அங்கு பக்தர்கள் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி கோராஜானா பகுதியில் உள்ள கோவில் உண்டியலில் ஆணுறை கிடந்துள்ளது.இந்த ஆணுறை முன்னதாகவே பயன்படுத்தப்பட்டு அதன்பிறகு கோவிலில் போடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே அங்கிருந்த மக்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர் உடனே சம்பவத்திற்கு விரைந்துவந்த போலீசார் அங்கு இருந்த சிசிடிவி கேமராவை வைத்து ஆய்வு செய்துள்ளனர்.

சிசிடிவி கேமராவில் யாரோ ஒருவர் உண்டியலில் எதையோ போட்டு சென்ற காட்சி பதிவாகியுள்ளது இதையடுத்து அந்த நபரின் அடையாளத்தை வைத்து போலீசார் அவரை கண்டுபிடித்து உள்ளனர்.அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.இது போன்ற ஏராளமான கோவில்களில் ஆணுறைகள் போட்டதை ஒப்புக் கொண்டுள்ளார்.மேலும்  இது சம்பந்தமாக அவரின் மீது போலீசார் வழக்கு  பதிவு செய்துள்ளனர்.

போலீஸ் விசாரணையின்போது பல்வேறு தகவலும் வெளியாகியுள்ளது. இந்த குற்றவாளி பெயர் தேவதாஸ் என்றும் அவருக்கு வயது 62 ஆகிறது. 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது.இவர் ஏற்கனவே இந்தப் பகுதியில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைப் பேசி உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.பயன்படுத்திய ஆணுறைகளை எல்லாம் குப்பைகளில் இருந்து எடுத்து வந்து மசூதிகள் மற்றும் கோவில்களில் வீசியதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த கோயில் உண்டியலில் யார் ஆணுறையை போட்டார்கள் என போலீசார் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில்,குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.