நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேச்சு... ஜனாதிபதி, பிரதமருக்கு முன்னாள் ராணுவ தளபதிகள் கடிதம்...
நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதிகள் ஐந்து பேர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் தர்ம சன்சத் என்ற ஹிந்து அமைப்பின் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா ஹிந்து நாடு என்றும், ஹிந்து மதத்தை பாதுகாப்பதற்கு தேவைப்பட்டால் முஸ்லீம்களை கொன்று குவிப்போம் எனவும் பேசியுள்ளனர்.
இதுபோன்ற வெறுப்பு பேச்சு நாட்டின் ஒற்றுமைக்கும் இறையான்மைக்கும் எதிரானது என்றும், இதை அனுமதிக்க கூடாது எனவும், இவ்வாறு பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு ஓய்வு பெற்ற ராணுவ தலைமை தளபதிகள் ஐந்து பேர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவித்து கடிதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.