கேரளா : ஓடிக்கொண்டிருந்த பள்ளி பேருந்தில் இருந்து விழுந்த குழந்தை...! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

கேரளாவில் ஓடிக்கொண்டிருக்கும் பள்ளி பேருந்தில் இருந்து சாலையில் விழுந்த குழந்தை... பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

கேரளா : ஓடிக்கொண்டிருந்த பள்ளி பேருந்தில் இருந்து விழுந்த குழந்தை...! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

கேரள மாநிலம் எர்ணாகுளம், ஆலுவாயில் நேற்று மாலை பள்ளி நேரம் முடிந்து குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து ஒன்றின் (எமர்ஜென்சி எக்ஸிட்) கதவு தானாக திறந்ததில் பேருந்துக்குள் இருந்த குழந்தை ஒன்று சாலையில் விழுந்துள்ளது. இதைப்  பார்த்த சாலையோரம் நின்ற அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு சாலையில் விழுந்த குழந்தையை காப்பாற்ற சென்றுள்ளனர். இதனால் பின்னால் இருந்து வந்த மற்றொரு பேருந்து திடீரென பிரேக் பிடித்ததால் அந்த குழந்தையின் உயிர் நொடி பொழுதில் தப்பியது. 

இந்த விபத்தில் குழந்தைக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தக் குழந்தையை அதே பள்ளி பேருந்தில் வீட்டில் சேர்ந்த்ததுடன், அந்த குழந்தையின் பெற்றோரிடம் நடந்தவற்றை எதுவும் கூறாமல் பள்ளி நிர்வாகத்தினர் மறைத்துள்ளனர். வீட்டிற்கு சென்ற குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது, இதன் பின்பு தான் வீட்டாருக்கும் விபத்து நடந்தது குறித்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆலுவா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.