ஜின்னாவின் ஆவி ஓவைசியிடம் குடிகொண்டுள்ளது... சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம்...

பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதின் ஓவைசி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜின்னாவின் ஆவி ஓவைசியிடம் குடிகொண்டுள்ளது... சர்ச்சை பேச்சுக்கு பாஜக கண்டனம்...

உத்தர பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க, ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தேர்தல் கூட்டம் ஒன்றில் போலீசாரை எச்சரித்து, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதின் ஓவைசி பேசினார். அப்போது பேசிய அவர், இந்திய பிரதமராக மோடியும், உத்தரப் பிரதேச முதலமைச்சராக ஆதித்யநாத்தும் எப்போதும் இருக்க மாட்டார்கள் என்றும், மோடி இமய மலைக்கும், யோகி ஆதித்யநாத் மடத்திற்கும் திரும்பினால் யார் காப்பாற்றுவார்கள் என விமர்சித்துள்ளார்.

இந்த பேச்சு உத்தரப் பிரதேச மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதையடுத்து தன் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு பா.ஜ.க, வெறுப்புணர்வை துாண்டுவதாக ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து பா.ஜ.க, செய்தி தொடர்பாளர் சுதன்ஷூ திரிவேதி பேசுகையில், இந்திய பிரிவினைக்கு ஓராண்டுக்கு முன் பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னா இதே போன்ற மிரட்டல் தான் விடுத்துள்ளார் எனவும், ஜின்னாவின் ஆவி, ஓவைசியிடம் குடி கொண்டுள்ளதாகவும் விமரிசித்துள்ளார்.