திரிணாமுல் காங்கிரஸில் இணைகிறாரா சுஷ்மிதா தேவ்?

காங்கிரஸிலிருந்து வெளியேறிய சுஷ்மிதா தேவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸில் இணைகிறாரா சுஷ்மிதா தேவ்?

காங்கிரஸ் கட்சியில் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அக்கட்சியின் மகளிர் அணி தலைவி சுஷ்மிதா தேவ், கட்சியின்  அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சுஷ்மா தேவின் வெளியேற்றம் குறித்து பேசிய அக்கட்சி மூத்த தலைவர் கபில் சிபல், பழம்பெரும் கட்சியிலிருந்து இளையோர்கள் வெளியேறுவதாகவும்,  இதற்கு கட்சியை முறையாக பலப்படுத்த தெரியவில்லை என விமர்சனம் எழுவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில் சுஷ்மிதா தேவ் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர் விரைவில் அக்கட்சியில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.