சர்வதேச விமான சேவை திட்டமிட்டபடி டிசம்பர் 15ம் தேதி தொடங்க வாய்ப்பில்லை...

சர்வதேச விமான சேவை திட்டமிட்டபடி டிசம்பர் 15ம் தேதி துவங்க வாய்ப்பில்லை என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச விமான சேவை திட்டமிட்டபடி டிசம்பர் 15ம் தேதி தொடங்க வாய்ப்பில்லை...

கொரோனா 2-வது அலைக்கு பின் பல்வேறு நாடுகளில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் புதிதாக உருமாற்றம் பெற்ற கொடிய ஒமிக்ரான் வகை  வைரஸ் தென் ஆப்ரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியுள்ளது. இது டெல்டாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததை அடுத்து, பல்வேறு நாடுகள் சர்வதேச பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்தநிலையில், புதிய வைரஸ் பரவல் காரணமாக,  டிசம்பர் 15-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையை துவக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், விரைவில் சர்வதேச விமான சேவையை துவங்குவதற்கான தேதி வெளியிடப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.