ஆப்கானிஸ்தானுக்கு 27 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிய இந்தியா!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு 27 டன் நிவாரண பொருட்கள் இந்தியா அனுப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு 27 டன் நிவாரண பொருட்கள் அனுப்பிய இந்தியா!!

ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் கடந்த 22-ந் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரத்து 150-க்கு மேற்பட்டோர் பலியாகினர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 விமானங்களில் 27 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது. கூடாரங்கள், போர்வைகள், பாய்கள் மற்றும் உணவு பொருட்கள் என அத்தியாவசிய பொருட்கள் இதில் அடங்கியுள்ளன. இவை அங்குள்ள ஐ.நா. ஒருங்கிணைப்பு அலுவலகம் மறும் ஆப்கன் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.