ஜான்சன் அன்ட் ஜான்சனின் ஒரு டோஸ் தடுப்பூசி... தொழில்நுட்பத்தை பெற இந்தியா தீவிர முயற்சி...

ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசியை பெற இந்தியா தீவிரம்

ஜான்சன் அன்ட் ஜான்சனின் ஒரு டோஸ் தடுப்பூசி... தொழில்நுட்பத்தை பெற இந்தியா தீவிர முயற்சி...
ஜான்சன் அன்ட் ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோஸினை கொள்முதல் செய்ய  இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. இதனை உறுதி செய்துள்ள நிதி ஆயோக்  உறுப்பினர் விகே பால்,  மாடர்னாவை தொடர்ந்து, ஜான்சன் அன்ட் ஜான்சனின் ஒரு டோஸ் தடுப்பூசியான ஜன்செனை(Janssen) பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
 
அந்த தடுப்பூசியை ஐதராபாத்தில் உள்ள பையோ இ நிறுவனம் மூலம் தயாரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். உருமாறிய வைரஸ்களுக்கு எதிராக இந்த தடுப்பூசி 85 சதவீதம் வரை செயலாற்றி உயிரிழப்பிலிருந்து தடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதன் தொழில்நுட்பத்தை பெறும் முயற்சியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளதாக பால் தெரிவித்துள்ளார்.