மின்தடை அமல்- வரும் 19-ம் தேதி முடிவெடுக்கப்படும்… மின்சாரத்துறை அமைச்சர்  

கேரளாவில் மின்தடையை அமல்படுத்துவது குறித்து வருகிற 19ம் தேதி முடிவெடுக்கவுள்ளதாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி கூறியுள்ளார்.

மின்தடை அமல்- வரும் 19-ம் தேதி முடிவெடுக்கப்படும்… மின்சாரத்துறை அமைச்சர்   

கேரளாவில் மின்தடையை அமல்படுத்துவது குறித்து வருகிற 19ம் தேதி முடிவெடுக்கவுள்ளதாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி கூறியுள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, மாநிலங்களில் மின்உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார். இந்தநிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அம்மாநில அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, மாநிலத்தில் சுமார் 100 மெகா வாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மின்தடையை அமல்படுத்துவது குறித்து வருகிற அக்.19-ம் தேதி முடிவெடுக்க வுள்ளதாகவும், மின்விநியோகம் மற்றும் தேவையை ஈடுசெய்ய  அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.