கணவர் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்.. கர்ப்பிணி பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் கணவர் கண்முன்னே கர்ப்பிணியை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணவர் கண்முன்னே அரங்கேறிய கொடூரம்.. கர்ப்பிணி பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

ரெபெல்லே ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நாகயலங்கா செல்ல ரயில் கிடைக்காதால் 3 குழந்தைகளுக்குத் தாயான கர்ப்பிணி ஒருவர் தன் கணவருடன் ப்ளாட்ஃபார்ம் மேசையில் உறங்கிக் கொண்டிருந்தார்.

கட்டிடத் தொழிலாளியான அவரை குடிபோதையில் வந்த 3 பேர் கணவரை அடித்து தாக்கி விட்டு கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசாரிடம் கணவர் புகார் அளிக்கச் சென்ற போது, எவ்வளவு தட்டியும் காவல்நிலையத்தின் கதவுகள் திறக்கப்படாததாக கூறப்படுகிறது.

இதனால் அருகே இருந்த மற்றொரு காவல்நிலையத்துக்கு சென்று அவர் தகவல் அளிக்கவே, போலீசார் சென்று கர்ப்பிணிப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 4 முறை குண்டூரில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.